நடைப்பயிற்சியே உடற்பயிற்சிகளில் எளிதானது. மிகச்சிறந்தது.
நடைப் பயிற்சியால் உடலில் ரத்த ஓட்டம் தடையின்றி நடைபெறுகிறது. வலிப்பு கோளாறுகள் வரும் வாய்ப்பு குறைகிறது.
நரம்புகள் வலுவடையும்.
தசைகளின் தொய்வு நீங்கும்.
எலும்புகள் உறுதியாகும்.
மூட்டுகளின் பந்துக் கிண்ணங்கள், கீழ் மூட்டுகள் அசைவதால் மூட்டுவலி தணிகிறது.
வியர்வையுடன் கழிவு நீர் வெளியேறுகிறது. உடல் ஆரோக்கியமாகிறது.
சிறுநீரகத்தின் வேலைப் பளு குறைகிறது. உயிர்ப்பு சுவாசம் அதிகமாகிறது.
மூளை சுறுசுறுப்பு அடைகிறது.
சிந்தனைவளம் பெருகுகிறது.
மண்டை ஓட்டின் தோல் பகுதிக்கும் குருதி பரவுவதால், தலைவலி எட்டிப்பார்க்கத் தயங்குகிறது.
சீரான மூச்சானது நுரையீரல் ஆற்றலை மேம்படுத்துகிறது.
நுரையீரலையும், இரைப்பையையும் பிரிக்கும் சுவரான உதரவிதானத் தசைகள் வலுப்படுகிறது.