முகப்பு
தினமணி கதிர்

இரவில் வீட்டில் படுத்ததே இல்லை

ஒரு முறை உடல் நலம் சரி இல்லாமலிருந்த உப்பு சத்தியாகிரக போராட்ட வீரர் சர்தார் வேத ரத்தினத்தைப் பார்த்த அவரின் குடும்ப டாக்டர், "ஆறு மாத காலத்திற்கு நீ உன் வீட்டுப் படியை விட்டு வெளியே இறங்கக் கூடாது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:


ஒரு முறை உடல் நலம் சரி இல்லாமலிருந்த உப்பு சத்தியாகிரக போராட்ட வீரர் சர்தார் வேத ரத்தினத்தைப் பார்த்த அவரின் குடும்ப டாக்டர், "ஆறு மாத காலத்திற்கு நீ உன் வீட்டுப் படியை விட்டு வெளியே இறங்கக் கூடாது. இந்த நிபந்தனைக்கு கட்டுப்பட்டு இருப்பதாக ஒப்புக்கொண்டால் தான் நான் உனக்கு வைத்தியம் செய்வேன்' என்றார். 

சர்தார் வேதரத்தினத்துக்கும் அந்த நிபந்தனைக்கு உட்படுவது தான் அப்போது செய்யக்கூடிய காரியமாக இருந்தது. ""ஆகட்டும் டாக்டர்'' என்று ஒப்புக் கொண்டார்.

சிகிச்சை தொடங்கிற்று. அந்த டாக்டரின் திறமையான சிகிச்சையால் வேதரத்தினம் வெகு விரைவில் நல்ல உடல் நலத்தை மீண்டும் அடைந்தார்.

வேத ரத்தினம் தம் வாழ்நாளிலேயே அந்த ஒரே ஒரு தடவை தான் சேர்ந்தாற் போல 6 மாத காலம் தம் சொந்த வீட்டில் படுத்திருந்தார்.

பிற்காலத்தில் அவருடைய வாழ்வின் பெரும் பகுதி நாள்கள் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்வதிலேயே கழிந்தது. வேதாரண்யத்தில் தங்க நேர்ந்த ஒரு சில நாள்களிலும் இரவில் அவர் தம் வீட்டில் படுத்ததே இல்லை. உப்பு கடையிலேயே படுத்து உறங்கினார்.

(கங்கை பகீரதன் எழுதிய "மறைக்காட்டில் ஒரு மாணிக்கம்' நூலிலிருந்து)

முழு கட்டுரையைப் படிக்க →