சிரி...சிரி...
""என்னம்மா... மெது வடை சிவப்பு கலர்ல இருக்கு?''""மருதாணி வைச்சிருந்த கையோட போட்டுட்டேங்க!''
தினமணி கதிர்சிரி...சிரி...
""என்னம்மா... மெது வடை சிவப்பு கலர்ல இருக்கு?''""மருதாணி வைச்சிருந்த கையோட போட்டுட்டேங்க!''
""என்னம்மா... மெது வடை சிவப்பு கலர்ல இருக்கு?''
""மருதாணி வைச்சிருந்த கையோட போட்டுட்டேங்க!''
-ப.சோமசுந்தரம்,
சென்னை.
""போலீஸ பாத்து ஏன் ஒளியற...ஏதும் தப்பு தண்டா பண்ணிட்டியா...?''
""திருட்டு தொழில விட்டு நாலு வருசமாச்சு.. ஆனா இன்னும் மாமூல் கேக்கறாங்க...''
-அ.செந்தில்குமார்,
சூலூர்.
""எனக்கு ஒரு "கடி ஜோக்' தெரியும்டா''
""சொல்லு... பார்ப்போம்..''
""சொன்னா.. கேட்கத்தான் முடியும். பார்க்க முடியாதுப்பா..''
-வி.ரேவதி,
தஞ்சாவூர்.
""மாமா.. உங்க பொண்ணு கடுங்கோபக்காரியா இருக்கா! அவ கூட நான் எப்படி குடும்பம் நடத்துறது?''
""மாப்ளே.. அவ அம்மா கூட நான் குடும்பம் நடத்துற மாதிரி நடத்துங்க!''
-கு.அருணாசலம்,
தென்காசி.
""மிருகங்களில் பொய் பேசறது எது தெரியுமா?''
""கரடிதான்! அதனால்தான் சும்மா கரடிவிடாதேன்னு சொல்றது வழக்கம்''
-ஆர்.யோகமித்ரா,
சென்னை.
""மன்னா.. இளவரசர் தந்திரம் மிகுந்தவர்..''
""எப்படி சொல்றீங்க.. தளபதியாரே..''
""மந்திரிகளை அடுத்த மன்னர் என்று சொல்ல வைத்துவிட்டாரே..''
-பி.கவிதா,
சிதம்பரம்.