சிரி... சிரி...
சர்வர்... பில்லுல ஏன் புதுசா சர்வீஸ் சார்ஜ் போட்டிருக்கீங்க?
'சர்வர்... பில்லுல ஏன் புதுசா சர்வீஸ் சார்ஜ் போட்டிருக்கீங்க?'
'பத்து முறை சட்னி, சாம்பார் வாங்கினீங்களே... அதுக்காகத்தான்!'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
Advertisement
Advertisement
'ராத்திரி அந்தப் பெண்ணோட பின்னாடி போய் செயினை பறிச்சுட்டு ஏன் விட்டுட்டு வந்துட்டே?'
'முன்னாடி பார்த்தப்பதான் அவ என் மனைவின்னு தெரிஞ்சுது!'
-எம்.பி.தினேஷ், கோவை.
'அந்த ஹோட்டலில் இட்லி தண்ணியா இருக்கே?'
'லிக்விட் இட்லியாம்!'
'மன்னருக்கு காயம் ஏற்பட்டு விட்டதா, எப்படி?'
'மன்னருக்கு சாமரம் வீசச் சொன்னால் சாமரத்தையே வீசிவிட்டதாம் அந்தப் பெண்!'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
'டைரக்டர் சார்... இப்போ எதுக்கு அண்டாவைத் தர்றீங்க?'
'நீதானேம்மா படத்துல பெரிய பாத்திரமா கேட்டீங்க!'
'சர்வர்... இது காபியா? டீயா?'
'சும்மா சாப்பிடுங்க சார்... பேரை அப்புறம் வெச்சிக்கலாம்!'
'பெட்ரோல் விலை உயர்ந்ததும் ஒருவிதத்தில் நல்லதுதான்!'
'என்ன தலைவரே சொல்றீங்க?'
' இனி ஒரு பயலும் என் கொடும்பாவியை எரிக்க மாட்டானுங்களே!'
'டாக்டர் ரூமில் குழந்தை ஏன் கத்துனான்... ஊசி போட்டாரா?'
'குழந்தை கையில் இருந்த சாக்லெட்டை பிடுங்குனாராம்!'
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
'ஆபிஸ்ல உங்களை எல்லாரும் 'எஸ்சார்'னு ஏன் சொல்றாங்க?'
'என் பெயர் எஸ். சாரங்கன்!'
'கால் கிலோ மிக்சர்ல இருபது கிராம் கம்மியா இருக்கே?'
'எடை போடும் போதே கை நீட்டி வாங்கிச் சாப்பிட்டா குறையாதா?'
'பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...'
'குக்கர் சோற்றுக்கு?'
'மூணு சத்தம் பதம்.'
'பாதி வம்பில் ஏன் கோபமா கிளம்பிட்டா?'
'நான் சரியா ஊம் கொட்டிக் கேட்கலயாம்!'
'உடனே பதில் சொல்லமுடியுமா... முடியாதா?'
'உடனே முடியாது. ஏன் முடியாது என்பதையும் லேட்டாதான் சொல்ல முடியும்!'
'உங்க வீட்ல புதையல் இருக்குன்னு என் தாத்தா கனவில் வந்து சொன்னார்.'
'மறுபடியும் வந்தால் அதில் என்ன இருக்குன்னு கேட்டுச் சொல்லு...'
- பர்வதவர்த்தினி, பம்மல்.
'சாமியார் ஏன் ரொம்ப நேரமா மீசை, தாடியை தடவிக் கிட்டே இருக்காரு?'
'நல்லா ஒட்டியிருக்கான்னு செக் பண்றாரோ என்னவோ!'
'உங்க கடையில முந்தில்லாம் இட்லி பஞ்சு மாதிரி இருக்குமே... இப்பெல்லாம் ஏன் கடினமா இருக்கு?'
'பஞ்சு மாதிரி இருந்தா சாம்பார்ல முக்கினதும் எல்லா சாம்பாரையும் உறிஞ்சிடுது, சார்!'
'அரசியல்வாதியோட பையன்னு இவன் நிரூபிச்சிட்டான்...'
'எப்படி சார்?'
'ஒரு புதுமொழி சொல்லுடான்னு கேட்டா, 'பதவி உள்ளபோதே தேற்றிக் கொள்!'னு சொல்றான்!'
-வி.ரேவதி, தஞ்சை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.