முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி...

அந்த ஹைடெக் திருமணத்தில் அவர் மட்டும் இன்னும் சாப்பிடாமல் உட்கார்ந்துகொண்டு இருக்கிறாரே, ஏன்?

பகிர்:

'அந்த ஹைடெக் திருமணத்தில் அவர் மட்டும் இன்னும் சாப்பிடாமல் உட்கார்ந்துகொண்டு இருக்கிறாரே, ஏன்?'

'அவருக்கு இன்னும் ஓ.டி.பி.

நம்பர் மாட்ச் ஆகவில்லையாம்!'

Advertisement

-மஞ்சுதேவன், பெங்களூரு.

----------------------------------------------------------------------------

'அந்த காக்கா வெறும் சப்பாத்தி மட்டும்தான் சாப்பிடுமா, ஏன்?'

'வடநாட்டில் இருந்து வந்திருக்காம்!'

-எம்.பி.தினேஷ், கோவை - 25.

----------------------------------------------------------------------------

'உன்கிட்ட பச்சைப் பயறு சுண்டல் செய்யச் சொன்னது தப்பாப் போச்சு!'

'என்ன சொல்றீங்க?'

'வேகாம பச்சையா வந்து கொண்டு தந்திட்டியே!'

-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

----------------------------------------------------------------------------

'நீங்க சொல்ற கதையை படமா எடுத்தா ஓடுமா?'

'ஏற்கெனவே கொரியாவுல ஓடியிருக்கே!'

-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா.

----------------------------------------------------------------------------

'டாக்டர், எனக்கு எல்லாம் டபுள் டபுளா தெரியுது!'

'சரி... வாயை ஊதுங்க!'

----------------------------------------------------------------------------

'நீ எதுக்கு திருடப் போகும்போது உன்கூட டூப்ளிகேட் சாவி பண்ற ஆளைக் கூட்டிக்கிட்டுப் போறே?'

'நல்ல பூட்டையெல்லாம் உடைக்க எனக்கு மனசு வராது, சார்!'

-தீபிகா சாரதி, சென்னை-5.

----------------------------------------------------------------------------

'நாம எடுக்கப்போகும் புதிய படத்துக்கு மக்கள் வரிசையில் நிற்கணும்... அப்படி ஒரு தலைப்பு வைக்கணும்.'

'அப்ப... 'சிலிண்டர்'னு வைக்கலாம்!'

----------------------------------------------------------------------------

'நம் தலைவரை வெளிநாட்டில் பிறந்த என் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கச் சொன்னது தப்பாப் போச்சு...'

'ஏன், என்னாச்சு?'

'பெட்ரோல், டீசல்னு பெயர் வைச்சிட்டாரு!'

எஸ்.சிவஞானம், வாணியம்பாடி.

----------------------------------------------------------------------------

'இருக்கும் இடத்துக்கேற்ற மாதிரி மன்னர் சாப்பிடுறார்...'

'என்ன சொல்றே?'

'பதுங்குக் குழியில் இருந்துட்டு 'குழி'ப் பணியாரம் சாப்பிடுறாரே!'

----------------------------------------------------------------------------

'மயிர்க்கூச்செறியும் படமுன்னு போய்ப் பார்த்தது தப்பாச்சுன்னு எதைவச்சு சொல்றே?'

'எல்லா 'முடி'யும் கொட்டி, தலை வழுக்கையாயிடுச்சு!'

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

----------------------------------------------------------------------------

'உங்க படம் ரொம்ப பெரிய படம்னு சொன்னீங்க... இது குறும்படமா இருக்கே?'

'சென்சாரில் வெட்டினது போக இவ்வளவுதான் கிடைச்சது!'

----------------------------------------------------------------------------

'இளவரசரின் கல்யாணத்துல மொய் எழுதுறவங்க பக்கத்துல நிற்குற ரெண்டு பேர் யாரு?'

'மொய்காப்பாளர்கள்!'

----------------------------------------------------------------------------

'நான் வீட்டோட மாப்பிள்ளையா போயிட்டேன், தெரியுமா?'

'அதான் உன் வண்டியிலே 'அத்தை-மாமா துணை'ன்னு எழுதியிருக்கியா?'

இந்து குமரப்பன், விழுப்புரம்.

----------------------------------------------------------------------------

'பெண் பார்க்க வந்தா காபி மட்டும் தானா..?'

'பையனைப் பிடிச்சிருக்குன்னு பொண்ணு சொல்லட்டும்... உடனே ஸ்வீட், காரம் வரும்.'

பர்வதவர்த்தினி, பம்மல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.