தினமணி கொண்டாட்டம்

நிறைய கனவுகள் உண்டு

DIN

சமீபத்திய வரவுகளில் பளீச் அறிமுகம் தந்திருக்கிறார் செந்தில்குமரன். "அண்ணாதுரை' படத்தில் வரும் கோதண்டம் கதாபாத்திரத்தில் கோபம், வாஞ்சை, பரிதவிப்பு, பாசம், நெருடல் என அத்தனை விதமான உணர்வுகளிலும் மிளிர்கிறார். இது குறித்து அவரிடம் பேசும் போது.... ""கனவுக்கும் யதார்த்தத்துக்கும் நடுவில் அனுதினமும் அலைந்து திரிந்த ஆயிரமாயிரம் நண்பர்களில் நானும் ஒருவன். பத்திரிகைதான் உலகம் என்று வந்த எனக்கு சினிமா மீது சின்ன ஆசை. இதுதான் களம் என்று கிடையாது. எழுத்து, சினிமா, நிகழ்ச்சித் தயாரிப்பு, உதவி இயக்குநர் வேலை, பாடலாசிரியர் என கிடைக்கிற இடத்தில் எல்லாம் திறமையை முன் வைக்க முயற்சி செய்வேன். எங்கெங்கும் அனுபவங்கள் மட்டுமே நிறைந்திருக்கும். வறுமை, பசி என கழிந்த காலங்கள் இதில் நிறைய உண்டு. பல வருட போராட்டம் இது. நிறைய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும், திருப்புமுனை எங்கேயாவதுதான் அமையும். அப்படித்தான் இந்த "அண்ணாதுரை' கோதண்டம் கதாபாத்திரம். ஏதோ ஒரு சந்திப்பில் கரம் பிடித்தார் விஜய் ஆண்டனி. கதையின் பெரும் பலமாக இருந்த இந்தக் கதாபாத்திரத்தை என்னை நம்பி எப்படி தந்தார் என்பது இப்போதும் புரியவில்லை. வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனிக்கு காலமெல்லாம் நன்றி. நல்ல சினிமா பற்றி நிறைய கனவுகள் உண்டு. அதில் என்னையும் இணைத்துக் கொண்டால், நம்பகமாக உழைப்பேன். நல்ல வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்'' என்றார் செந்தில்குமரன். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT