தினமணி கொண்டாட்டம்

என்ன தவம் செய்தேனோ

DIN

இணைந்த கைகள் கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "என்ன தவம் செய்தேனோ'. கஜினி முருகன், விஷ்ணு பிரியா, பிரியாமேனன், பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம்புலி, மயில்சாமி, டெல்லிகணேஷ், ஆர்த்தி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் பேரரசுவின் உதவியாளர் முரபாசெலன் கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் திசையைத் தீர்மானிக்கிறது. அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடுகிறது. அப்படித்தான் இங்கே ஒரு சூழல். அரசியல் செல்வாக்கும், பணபலமும் கொண்ட ஒரு பிரபல புள்ளியின் திமிர் பிடித்த மகளை வாடகை வண்டியின் மூலம் தெருவில் ஐஸ் விற்று பிழைக்கும் ஒருவன் காதலிக்கிறான். அவனது துணிச்சலை பார்த்து அந்தப் பெண்ணும் காதலிக்க தொடங்குகிறாள். பெரும் புள்ளிக்கு தெரியவருகிறது, தப்பி பிழைக்க ஊரை விட்டு ஓடிய காதலர்கள் இணைந்தர்களா? அவர்களை எதிர்த்து உயிருடன் வாழ்ந்தார்களா? என்பதுதான் திரைக்கதை. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஜூலை மாத வெளியீடாக படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. ஒளிப்பதிவு - நௌஷாத்.
 இசை - தேவ்குரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT