தினமணி கொண்டாட்டம்

அருவா சண்ட

DIN


ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வரும் படம் "அருவா சண்ட'. படத்தைத் தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார் வி. ராஜா. கதாநாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். சரண்யா பொன்வண்ணன், "ஆடுகளம்' நரேன், கஞ்சா கருப்பு, செளந்தர்ராஜா உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதை எழுதி இயக்குகிறார் ஆதிராஜன். படம் குறித்து வி.ராஜா பேசும் போது... ""உலகத்திலேயே தலை சிறந்த ஜனநாயக நாடு என இந்தியாவை மெச்சி கொள்கிறோம். இங்கே எங்கே இருக்கிறது ஜனநாயகம். நவ யுகத்துக்குள் நுழைந்து விட்டதாக பெருமை பேசிக் கொள்ளும் அதே நேரத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆவணப் படுகொலைகள்
தமிழகத்தில் நடந்தேறி வருகின்றன. இதை எதன் அடிப்படையில் இங்கே பேசுவது...

எத்தனை கொலைகள்.. இதன் பின்னால் உள்ள நிஜங்கள் கூடும்போது, இன்னும் அதிர்ச்சிகள். இதற்கு பின்னால் சாதி, மத, பண்பாடு சார்ந்த அழுத்தமான அரசியலும் இருக்கிறது. இத்தனை சுதந்திரமான ஜனநாயக நாட்டில் இன்னும் ஜாதிய சிக்கல்களில் இளைஞர்கள் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதன் தெளிவான எடுத்துக்காட்டுத்தான் இது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் என்னை மனிதனாக உணர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறேன். விரைவில் திரைக்கு வருகிறோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT