செவ்வாயில் செல்ஃபி!
பூமியில் இருந்து சுமார் 57 கோடி தொலைவில் உள்ள செவ்வாய்க் கிரகத்தை ஆய்வதற்காக நாசா அனுப்பிய கியூரியாசிட்டி என்ற விண்கலம் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதியில் இருந்து செவ்வாய்க் கிரகத்திலிருந்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.
பூமியில் இருந்து சுமார் 57 கோடி தொலைவில் உள்ள செவ்வாய்க் கிரகத்தை ஆய்வதற்காக நாசா அனுப்பிய கியூரியாசிட்டி என்ற விண்கலம் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதியில் இருந்து செவ்வாய்க் கிரகத்திலிருந்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. இந்தப் புகைப்படங்கள் குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி அஸ்வின் வாசவதா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்து வருகிறது. செவ்வாயைப் படமெடுத்துக் கொண்டிருந்த கியூரியாசிட்டி விண்கலத்துக்கு செல்பி எடுக்கும் ஆசையும் வந்ததோ என்னவோ? 2015 ஆகஸ்ட் 5-ஆம் தேதியில் தனது செல்பியை எடுத்து நாசாவுக்கு அனுப்பி வைத்தது.