முகப்பு
மகளிர்மணி

பைக்கில் உலகை தனியாக சுற்றி வர வேண்டும்! - இஷாவின் கனவு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்  எந்தத் துணையுமின்றி  தன்னந்தனியாக  பைக்கில், சென்னை,

Updated On : 29 பிப்ரவரி, 2016 at 5:32 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:10 PM

இரண்டு ஆண்டுகளுக்கு முன்  எந்தத் துணையுமின்றி  தன்னந்தனியாக  பைக்கில், சென்னை, கொல்கொத்தா, டில்லி, மும்பை  நகரங்களை இணைக்கும்  நான்கு வழி சாலைகளில்  7000 கி.மீ பயணம் செய்து சாதனைப் படைத்தவர்தான்  இஷா குப்தா. தற்போது  38 ஆயிரம் கி.மீ தூரத்தை 110 நாட்களில் நிறைவு செய்யும் திட்டப்படி ஜனவரி 16 - இல் பயணம் தொடங்கியிருக்கிறார் இஷா.  இவர் பெங்களூரிலுள்ள  தனியார்  நிறுவனத்தில்  நல்ல சம்பளத்தில்  பணிபுரிந்து   வந்தார்.  பயண ஆர்வத்தைக் கட்டுப் படுத்த முடியாமல், வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

இது பற்றி அவர் கூறுகையில்:

 "" என்னால் இனி  காலை ஒன்பது முதல் மாலை ஐந்து மணி வேலைக்குத் திரும்ப முடியும் என்று தோன்றவில்லை'' என்று சொல்லும் இவரின் தாயார் கேரளத்துக்காரர்,  தந்தை  மருத்துவர். மூன்று சகோதரிகளில் இவர்  கடைக்குட்டி. இவரது சிறு  வயதிலேயே  தாயார் காலமானார். தந்தை இறந்து 10 ஆண்டுகள்  ஆகிவிட்டனவாம்.

பயணத்திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றப் போகிறாராம்?

Advertisement

 தினமும் சுமார் 400 கி.மீ பயணம் செய்ய  வேண்டும். அப்போதுதான்  110 நாட்களில்  38,000 கி.மீ பயண  இலைக்கை  அடைய  முடியும்.

 இவரின் அடுத்த ஆசை?

பைக்கில் உலகை தன்னந்தனியாகச் சுற்றி  வர வேண்டும்  என்பது இவரின் ஆசை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.