மகளிர்மணி

கர்ப்பக் கால கவனிப்பு

மு. சுகாரா

* கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரமே சாப்பிட வேண்டும்.  இதனால் ரத்தத்தில்  உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும்.  அடிக்கடி மயக்கமும் வராது.

* வயிற்றில் குழந்தை வளர, வளர, அதிகமாக சாப்பிட முடியாது.  சீக்கிரம் பசியும் எடுக்காது. அதனால் சாப்பிடாமல் இருக்காமல்,  ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

* பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று  தசைகள் வலுப்பெற சின்னசின்ன உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.

* கர்ப்பிணிகள் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியை  வாழைப்பழம் தருகிறது. உடல்  சூடு  மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது.  இதனால் தாய்லாந்தில்  கர்ப்பிணி பெண்களின் தினசரி உணவில்  வாழைப்பழ ரெசிபிகள் விதவிதமாக இருக்குமாம்.  மேலும், வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சத்து குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

* கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல்  பிரச்னை வரும்.  அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். 

* பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு  சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில்  கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கும் இதுதான் காரணம். எனவே, பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்துதான் அதற்கான பெல்ட்டை அணியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT