தேவையானவை:
சாமை அரிசி - 1/2 கிண்ணம்
இட்லி அரிசி - 1 1/2 கிண்ணம்
உளுந்து - 1 கிண்ணம்
இஞ்சி துருவல் - 1 மேசைக்கரண்டி
மிளகு, சீரகம் - 1/2 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய், நெய் - தலா 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, சாமை, உளுந்து ஆகியவற்றை 6 மணி நேரம் ஊற வைத்து, ரவை பதமாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி துருவல், பொடித்த மிளகு, சீரகம் ஆகியவற்றை மாவில் கொட்டிக் கலக்கவும். அதனுடன் நெய், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மாவை சிறு கிண்ணங்கள் அல்லது டம்ளரில் பாதியளவு ஊற்றி, இட்லிப் பானையில் வேக வைக்கவும். சட்னி சாம்பார் அல்லது இட்லிப் பொடியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.