நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமியா, தான் எழுதிய கவிதை தொகுப்புக்கு "முறிந்த சிறகுகள்' என பெயர் வைத்துள்ளார். அவ்வப்போது கவிதை வாசிக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்தால் இவர் அங்கு சென்று கவிதை வாசிப்பதுண்டு. ஆங்கிலோ இந்திய சமூகத்தை சேர்ந்த இவர், தன் சமூகத்தைப் பற்றிய வரலாறு புத்தகமொன்றையும் எழுதப் போகிறாராம். அண்மையில் பெங்களூரு கவிதை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சில கவிதைகளை வாசித்தார். அதில் சில கவிதைகள் சோகமாக இருந்ததற்கு என்ன காரணம்? என்று கேட்டபோது, "திருமணமான ஒருவருடன் நான் தொடர்பு வைத்திருந்த இருண்ட காலத்தின் துயரத்தை அடக்க முடியாமல்'' எழுதியவை அவை எனக் கூறினார்.