மகளிர்மணி

சமையல் குறிப்புகள்...

பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டை வெட்டிப் போட்டால் குழம்பில் கசப்பே தெரியாது.

சி.ஆர்.ஹரிஹரன்

பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டை வெட்டிப் போட்டால் குழம்பில் கசப்பே தெரியாது.

பாயசம், கேசரி போன்றவைக்கு அரிசி, ரவை வெந்த பிறகே சர்க்கரையைச் சேர்க்க வேண்டும்.

பாலில் எலுமிச்சம் பழம் பிழிந்து கொதிக்க வைத்து வடிகட்டவும். பனீர் கிடைக்கும். பனீர் போக எஞ்சியுள்ள திரவத்தைக் கொட்டாமல் சூப், குருமா போன்றவற்றில் சேர்க்கவும். சப்பாத்தி பிசையவும் பயன்படுத்தலாம்.

கறுத்தப் புளியில் சாம்பார் வைத்தால் சாம்பார் கறுப்பாக இருக்கும். அதற்கு சிறிது தேங்காய்ப்பால் விட்டால் கறுப்பு நிறம் மாறி சாம்பாரும் டேஸ்ட்டாக இருக்கும்.

தோசை மாவு அரைத்த இரண்டு மணி நேரத்தில் புளிக்கச் செய்வதற்கு சிறிது மிளகாய் வற்றல் காம்புகளைப் போட்டு வைத்தால் விரைவில் மாவு புளித்து விடும். தோசையின் சுவையும் அலாதிதான்.

உருளைக்கிழங்கை பொரியல் செய்யும்போது அதில் அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும்.

இரவில் சப்பாத்தியோ, பூரியோ மீதமாகிப் போனால் அவற்றுடன் தோலுடன் ஒரு உருளைக்கிழங்கைப் போட்டு மூடி வைத்தால் அப்படியே மிருதுவாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT