முகப்பு
மகளிர்மணி

வேப்பம் பூ பொக்கிஷம்!

மருத்துவச் செலவை எப்படியாவது குறைத்து ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு கண்கண்ட மருந்து வேப்பம்பூ

Updated On : 26 ஏப்ரல் 2021, 6:35 pm IST
பகிர்:


மருத்துவச் செலவை எப்படியாவது குறைத்து ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு கண்கண்ட மருந்து வேப்பம்பூ.

வேப்பம் பூ பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுவதால் மருத்துவ உலகில் வேப்பம் பூ பொக்கிஷமாக கருதப்படுகிறது.

வேப்பம் பூ பங்குனி மாதத்தில் அதிகளவு பூக்கும். இதனால் முடிந்தவரை வேப்பம்பூவை சேகரித்து வைத்துக் கொண்டால் ஆண்டு முழுவதும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

Advertisement

Advertisement

புதிதாக பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்.

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் நம்மை அண்டாது.

கேன்சர் கிருமிகளை கொல்வது, உடலுக்கு குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , பல் சுத்தம் போன்றவற்றிற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது வேப்பம் பூ.

தொடர்ந்து வேப்பம்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் முழுமையாக கட்டுக்குள் வந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments