மகளிர்மணி

மீண்டும் தேவயானி

அங்கவை

தமிழ்த் திரைப்பட உலகின் உள்ளேயும் வெளியேயும் நடிகை தேவயானிக்கென்று தனி இடம் இன்றும் உள்ளது.

முன்னணி நடிகையாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டு, திரைப்படங்களுக்கு பிரியா விடை கொடுத்தார். பிறகு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து, சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கும் நீண்ட இடைவெளி கொடுத்தார்.

2003-இல் ஒளிபரப்பான "கோலங்கள்' சின்னத்திரை தொடரில் "அபிநயா' பாத்திரத்தின் மூலம் தேவயானி பிரபலமானார். 1500 எபிசோடுகளுடன் அந்தத் தொடர் 2009 வரை ஒளிபரப்பப்பட்டதால், தேவயானிக்கு வீடுகள் தோறும் ரசிகர்கள் பெருகியிருந்தனர். தேவயானியும் பிரபலமாக இருந்தார்.

பிறகு தேவயானி அவ்வப்போது சின்னத்திரையில் தலை காட்டினாலும், பெரிதாகப் பேசப்படவில்லை. 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தேவயானி மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார்.. "ஜீ' தமிழ் சானலில் "புதுப்புது அர்த்தங்கள்' தொடரின் இரண்டாவது சீசனில் தேவயானி நடிக்கிறார். தேவயானிக்கு ஜோடி அபிபாஸ்கர். தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதம் ஒளிபரப்பாகும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT