மீண்டும் தேவயானி
தமிழ்த் திரைப்பட உலகின் உள்ளேயும் வெளியேயும் நடிகை தேவயானிக்கென்று தனி இடம் இன்றும் உள்ளது.
தமிழ்த் திரைப்பட உலகின் உள்ளேயும் வெளியேயும் நடிகை தேவயானிக்கென்று தனி இடம் இன்றும் உள்ளது.
முன்னணி நடிகையாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டு, திரைப்படங்களுக்கு பிரியா விடை கொடுத்தார். பிறகு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து, சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கும் நீண்ட இடைவெளி கொடுத்தார்.
2003-இல் ஒளிபரப்பான "கோலங்கள்' சின்னத்திரை தொடரில் "அபிநயா' பாத்திரத்தின் மூலம் தேவயானி பிரபலமானார். 1500 எபிசோடுகளுடன் அந்தத் தொடர் 2009 வரை ஒளிபரப்பப்பட்டதால், தேவயானிக்கு வீடுகள் தோறும் ரசிகர்கள் பெருகியிருந்தனர். தேவயானியும் பிரபலமாக இருந்தார்.
Advertisement
Advertisement
பிறகு தேவயானி அவ்வப்போது சின்னத்திரையில் தலை காட்டினாலும், பெரிதாகப் பேசப்படவில்லை. 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தேவயானி மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார்.. "ஜீ' தமிழ் சானலில் "புதுப்புது அர்த்தங்கள்' தொடரின் இரண்டாவது சீசனில் தேவயானி நடிக்கிறார். தேவயானிக்கு ஜோடி அபிபாஸ்கர். தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதம் ஒளிபரப்பாகும்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.