முகப்பு
மகளிர்மணி

முள்ளு  முருங்கை  தோசை

முள்ளு  முருங்கை  இலையைக்  கழுவி  வைக்கவும்.  இட்லி  அரிசியைக் களைந்து 2 மணி  நேரம் ஊறவைக்கவும்.  மிக்ஸியில்  அரிசி,  சீரகம்,  முள்ளு  முருங்கை இலை,  உப்பு சேர்த்து   கொரகொரப்பாக  அரைக்கவும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:32 AM
பகிர்:

தேவையானவை:

முள்ளு  முருங்கை  இலை - 15
இட்லி அரிசி  -  1 கிண்ணம்
சீரகம்  -அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம்  - 6
உப்பு  - தேவைக்கேற்ப
எண்ணெய்  - தேவைக்கேற்ப

செய்முறை:   

முள்ளு  முருங்கை  இலையைக்  கழுவி  வைக்கவும்.  இட்லி  அரிசியைக் களைந்து 2 மணி  நேரம் ஊறவைக்கவும்.  மிக்ஸியில்  அரிசி,  சீரகம்,  முள்ளு  முருங்கை இலை,  உப்பு சேர்த்து   கொரகொரப்பாக  அரைக்கவும்.  சின்ன வெங்காயத்தைக் கலந்த  சிறிது  நேரம்  வைத்திருந்து  கல்லில்  எண்ணெய்  தடவி தோசைகளாக வார்க்கவும்.  வெங்காயச் சட்னியுடன்  பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.