மகளிர்மணி

பச்சைப்பட்டாணி சுண்டல்

ஏ. காந்தி

தேவையானவை: 

பச்சைப் பட்டாணி - 1 கிண்ணம்
கேரட் துருவல் - 3 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 3 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
மேலே தூவுவதற்கு:
 நறுக்கிய மல்லித்தழை - 2 தேக்கரண்டி

செய்முறை: 

பச்சைப் பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் 2  தேக்கரண்டி,  எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பட்டாணியைச் சேர்த்து வதக்கி கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். மல்லித்தழை தூவி கலந்துவிடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT