மகளிர்மணி

நவதானிய அடை 

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து களைந்து இஞ்சி, மிளகு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை: 

புழுங்கலரிசி- 200 கிராம்
முளை கட்டிய கொள்ளு, சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, பாசிப்பயிறு, காராமணி, கறுப்பு உளுந்து, கொண்டை கடலை- தலா 50 கிராம், இஞ்சி- 2 துண்டு, மிளகு- 10, மிளகாய் வற்றல்-5, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை: 

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து களைந்து இஞ்சி, மிளகு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும். முளை கட்டிய நவ தானியங்கள், பாசிப்பயிறு, கறுப்பு உளுந்து, கொண்டை கடலையைத் தனியாக அரைத்து அரிசி மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து வைத்து காய்ந்ததும் மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி பரவலாக இழுத்து, எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT