தேவையானவை:
பச்சரிசி ஒரு கிண்ணம்
உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு தலா 2 மேசைக்கரண்டி
வெந்தயம் ஒரு தேக்கரண்டி
துருவிய வெல்லம் முக்கால் கிண்ணம்
துருவிய தேங்காய் கால் கிண்ணம்
ஏலக்காய்த் தூள் ஒரு தேக்கரண்டி
எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் தேங்காயையும் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
பிறகு, வெல்லம், ஏலக்காய்த் தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இந்த மாவைக் கரண்டியால் எடுத்து கொஞ்சம் ஊற்றி, ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எண்ணெயை வடிய விட்டு எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.