கத்தரிக்காய் அம்பால்
புளியை ஊற வைத்து எடுத்துகொள்ள வேண்டும். கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும்.
தேவையானவை:
கத்தரிக்காய்- 250 கிராம்
தக்காளி- 2 பெரியது, தோலை உரித்து நறுக்க வேண்டும்.
புளி- எலுமிச்சைப் பழம் அளவுக்கு..
சர்க்கரை- 1 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை- 25
கடுகு- 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி- 2 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
Advertisement
Advertisement
புளியை ஊற வைத்து எடுத்துகொள்ள வேண்டும். கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். தேவையான எண்ணெய்விட்டு கடுகைப் போட்டு அது வெந்ததும் கொஞ்சம் மஞ்சள் பொடியுடன் கத்தரிக்காயை போட்டு வதக்க வேண்டும். சற்று வதங்கியதும் தக்காளி, சர்க்கரை, திராட்சை, மிளகாய்ப் பொடி, உப்பு முதலியவற்றைப் போட்டு புளித் தண்ணீரையும் விட்டு நன்றாக வதக்கவும். வெந்ததும் இதனுடன் கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.
-ஆர்.ஜெயலட்சுமி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.