மகளிர்மணி

அவல் அடை

அரிசியை பார்லி, அவலை தனித்தனியாகத் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும். ஊறியதும் உப்பு, நறுக்கிய இஞ்சி, மிளகு, மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் போட்டு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

புழுங்கல் அரிசி-250 கிராம்
கெட்டி அவல்- 100 கிராம்
பார்லி- 1 கரண்டி
இஞ்சி- 1 துண்டு
மிளகாய் வற்றல்- 4
மிளகு- 10
வெங்காயம்- 100 கிராம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

அரிசியை பார்லி, அவலை தனித்தனியாகத் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும். ஊறியதும் உப்பு, நறுக்கிய இஞ்சி, மிளகு, மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் போட்டு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அரைத்த மாவில் சேர்த்து கலக்க வேண்டும். அடுப்பில் அடைக்கல்லைப் போட்டு காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை பரவலாக ஊற்றி எண்ணெய்விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு,  வேக வைத்து எடுக்க வேண்டும். அடை மொறுமொறுவென கமகமவென மணத்துடன் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதனூரில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் திறப்பு

மாா்த்தாண்டம் அருகே பதுக்கிய மண்ணெண்ணெய் பறிமுதல்

போதையில்லா சமுதாயமே இலக்கு...

ரத்த சோகை விழிப்புணா்வு: 3,500 பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை

பாா்வை பறிபோன பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

SCROLL FOR NEXT