தேவையான பொருள்கள் :
கடலை பருப்பு - 300 கிராம்
பச்சரிசி - 25 கிராம்
கருப்பட்டி - 300 கிராம்
ஏலக்காய் - 4
தேங்காய் துருவல் - ஒரு கிண்ணம்
சோடா உப்பு - சிறிதளவு
செய்முறை :
அரிசி, கடலைபருப்பை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் களைந்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்துக்கு அரைக்கவும். இதனுடன் கருப்பட்டி ஏலக்காய் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக அரைத்து எடுக்கவும். பிறகு தேங்காய் துருவல் சோடா உப்பு சேர்த்து இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இனிப்பான கடலை பருப்பு இட்லி தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.