பெங்காலி தேங்காய் சந்தேஷ்
அகன்ற தாம்பாளத்தில் தேங்காய்த் துருவலை ஒரு மணிநேரம் நிழலில் காய வைத்து ஒரு வாணலியில் மாற்றிக் கொண்டு, அதனுடன் பன்னீர், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி விடவும்.
தேவையான பொருள்கள்:
தேங்காய்த் துருவல் -1 கிண்ணம்
பன்னீர் - 1 லிட்டர்
சர்க்கரை - 250 கிராம்
ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி
ரோஸ் எசென்ஸ் - சிறிதளவு
செய்முறை:
அகன்ற தாம்பாளத்தில் தேங்காய்த் துருவலை ஒரு மணிநேரம் நிழலில் காய வைத்து ஒரு வாணலியில் மாற்றிக் கொண்டு, அதனுடன் பன்னீர், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி நன்கு சுருண்டு வரும் பொழுது எசென்ஸ் சேர்த்துக் கலந்து நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி துண்டுகள் போடவும்.