தேங்காய் அரிசி உப்புமா
இரண்டு அரிசியையும் தண்ணீர்விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
Updated On : 16 நவம்பர், 2024 at 10:51 PM
தேவையான பொருள்கள்:
பச்சரிசி -200 கிராம்
புழுங்கலரிசி- 100 கிராம்
Advertisement
புளி- ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு
தேங்காய்-1
மிளகாய் வத்தல்- 10
வெல்லம்- இரண்டு அச்சு
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு- தலா 2 தேக்கரண்டி
கடுகு- 1 மேசைக்கரண்டி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
Updated On : 16 நவம்பர், 2024 at 10:51 PM
செய்முறை:
இரண்டு அரிசியையும் தண்ணீர்விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காய்த் துருவல், மிளகாய் வத்தல், வெல்லம் ஆகியவற்றை அரிசியோடு சேர்த்து அரைத்து தண்ணீர்விட்டு அலம்பி தோசை மாவு பதத்தில் கரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளித்து கரைத்த மாவைவிட்டு கெட்டியாகக் கிளறி எடுக்க வேண்டும். வாணலியை சுரண்டி எடுத்தால் உதிர் உதிராக வரும். இது சாப்பிட சுவையாக இருக்கும்.