தேங்காய் அரிசி உப்புமா 
மகளிர்மணி

தேங்காய் அரிசி உப்புமா

இரண்டு அரிசியையும் தண்ணீர்விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

பச்சரிசி -200 கிராம்

புழுங்கலரிசி- 100 கிராம்

புளி- ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு

தேங்காய்-1

மிளகாய் வத்தல்- 10

வெல்லம்- இரண்டு அச்சு

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு- தலா 2 தேக்கரண்டி

கடுகு- 1 மேசைக்கரண்டி

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

இரண்டு அரிசியையும் தண்ணீர்விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காய்த் துருவல், மிளகாய் வத்தல், வெல்லம் ஆகியவற்றை அரிசியோடு சேர்த்து அரைத்து தண்ணீர்விட்டு அலம்பி தோசை மாவு பதத்தில் கரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளித்து கரைத்த மாவைவிட்டு கெட்டியாகக் கிளறி எடுக்க வேண்டும். வாணலியை சுரண்டி எடுத்தால் உதிர் உதிராக வரும். இது சாப்பிட சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஞ்சாமி தந்தானே... ரசிகர்களைக் கவரும் இட்லி கடை பாடல்!

கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது: உயா் நீதிமன்றம்

திருப்பூரில் ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு! மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்!

ஆர்வமூட்டும் மம்மூட்டியின் களம்காவல் டீசர்!

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT