வெங்காய பிரியாணி
அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.
தேவையானவை:
பாசுமதி அரிசி- 250 கிராம்
வெங்காயம்- 2 (பொடியாக நறுக்கவும்)
Advertisement
Advertisement
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
எண்ணெய்- 3 தேக்கரண்டி
நெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
அரைக்க:
மிளகாய்த் தூள்- அரை தேக்கரண்டி
தனியாத் தூள்- ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பட்டை- தலா 1 துண்டு
கிராம்பு, ஏலக்காய்- தலா 2
பூண்டு- 10 பல்
செய்முறை:
அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். பின்னர் அரைத்த விழுதை நன்றாக வதக்கி, இரண்டு கிண்ணம் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அரிசியைச் சேர்த்து வெந்ததும் இறக்கி, பரிமாறவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.