மகளிர்மணி

தினை கொழுக்கட்டை

தினை அரிசியை சுத்தம் செய்து ஊற வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து, 4 கிண்ணம் தண்ணீரைவிட்டுக் கொதிக்க விடவும்.

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

தினை அரிசி - 2 கிண்ணம்

இஞ்சி - 1 சிறிய துண்டு

கடலைப் பருப்பு - அரை மேசைக் கரண்டி

பச்சை மிளகாய் - 4

சீரகம் - அரை மேசைக்கரண்டி

கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

தாளிக்க: கடுகு, உளுந்தம் பருப்பு

செய்முறை:

தினை அரிசியை சுத்தம் செய்து ஊற வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து, 4 கிண்ணம் தண்ணீரைவிட்டுக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் ஊற வைத்த தினை அரிசியைப் போட்டு நன்றாக வேக வைக்கவும். தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக வெந்ததும் இறக்கிவிடவும். நன்றாக ஆறியதும் கொழுக்கட்டையைப் போலப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து அவித்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு: சாலையில் 6 அடி உயரத்துக்கு 38 கி.மீ. படர்ந்த பனி! வெளியேற முடியாமல் தவித்த 40 வீரர்கள் பத்திரமாக மீட்பு!

புதிய ரெனால்ட் டஸ்டர் கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமானது சமத்துவமில்லாத இந்தியா: காங்கிரஸ்

டி20 உலகக் கோப்பையை வெல்ல மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதிக வாய்ப்பு: பிராவோ

ஓ ரோமியோ படத்தில் திஷா பதானியின் கவர்ச்சி நடனம்!

SCROLL FOR NEXT