முகப்பு
மகளிர்மணி

வாழைத்தண்டு கறி

வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கவும். பின்னர், அத்துடன் தேவையான உப்பு, பாசிப் பருப்பு, புளித்த மோர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

Updated On : 7 செப்டம்பர் 2025, 7:12 pm IST
பகிர்:

தேவையான பொருள்கள்:

வாழைத் தண்டு- 1 துண்டு

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

Advertisement

Advertisement

கடுகு, உளுந்தம் பருப்பு- தாளிக்க

காய்ந்த மிளகாய்- 3

தேங்காய்த் துருவல். பாசிப் பருப்பு- தலா கால் கிண்ணம்

புளித்த மோர்- சிறிதளவு

செய்முறை:

வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கவும். பின்னர், அத்துடன் தேவையான உப்பு, பாசிப் பருப்பு, புளித்த மோர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, கிள்ளிய மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, தாளித்து ஊற வைத்துள்ள வாழைத்தண்டைப் பிழிந்து, வாணலியில் போட்டு சிறிதளவு தண்ணீரைவிட்டு, மிதமான தீயில் வேகவிடவும்.

நன்றாக வெந்ததும், தேங்காய்த் துருவலைச் சேர்த்து, நன்றாகக் கிளறி எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments