மகளிர்மணி

பாட்டி வைத்தியம்...!

தூதுவளை இலைகளை இட்டு கஷாயம் செய்து குடித்து வர மார்புச் சளி குணமாகும்.

தினமணி செய்திச் சேவை

* தூதுவளை இலைகளை இட்டு கஷாயம் செய்து குடித்து வர மார்புச் சளி குணமாகும்.

* பிரண்டைத் தண்டை பொடியாக நறுக்கி, மிளகு, சீரகம், சுக்கு சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர கை, கால், மூட்டு வலி குணமாகும்.

-உ.இராமநாதன், நாகர்கோவில்.

* மணத்தக்காளியானது நெஞ்சுச் சளி, இருமல், இளைப்பைப் போக்கும்.

* குறைந்த ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு பூண்டு சிறந்த நிவாரணியாகும்.

* வாழைப்பூவை தயிரில் கலந்து சாப்பிட்டால், ரத்தப் பேதி, சீதபேதி, பெரும்பாடு, மாதவிலக்கு, வயிற்று வலி ஆகியன குணம் அடையும்.

-முக்கிமலை நஞ்சன்

* தாய்ப்பால் சரியாகச் சுரக்காதவர்கள் காலை, மாலை தலா ஒரு பேரிக்காயைச் சாப்பிட்டால், தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

* வாழைத்தண்டை நறுக்கும்போது கிடைக்கும் நாரை வீசி எறியாமல் விளக்குக்குத் திரியாகப் பயன்படுத்தலாம்.

* பல் ஈறு வீங்கி வலி ஏற்பட்டால், நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்தால் வலி நின்றுவிடும்.

* பூசணிச்சாறை செம்பருத்திப் பூவுடன் சாப்பிட்டு வந்தால் நீர்த்தாரை எரிச்சல் குணமாகும்.

* முளைக்கீரையை வாரம் ஒரு நாள் தொடர்ந்து சாப்பிட்டால் நரை குணமாகும்.

* நாவல் பழம், பாகற்காய், அவரைக்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

-விமலா சடையப்பன், காளனம்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிராக வரலாறு படைத்த டேரில் மிட்செல்!

குறள் படித்தால் குவலயம் ஆளலாம்!

“திமுக கூட்டணி சரியாக இல்லை!” தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்!

பிக் பாஸுக்கு பிறகு முதல்முறையாக... தாயுடன் விஜே பார்வதி!

SCROLL FOR NEXT