சாக்ரடீசின் பொன்மொழிகள்
1. ஆழ்ந்து சிந்தித்து, நீங்களே முடிவு செய்து செயல்படுங்கள்! 2. நேர்மை என்பது செய்யும் செயலைப் பொறுத்தது; உண்மையைப் பேசி உண்மையாக நடப்பது மட்டுமே நேர்மையாகாது! 3. நீதி வேறு, நட்பு வேறு; இரண்டையும் ஒன்ற
1. ஆழ்ந்து சிந்தித்து, நீங்களே முடிவு செய்து செயல்படுங்கள்!
2. நேர்மை என்பது செய்யும் செயலைப் பொறுத்தது; உண்மையைப் பேசி உண்மையாக நடப்பது மட்டுமே நேர்மையாகாது!
3. நீதி வேறு, நட்பு வேறு; இரண்டையும் ஒன்றாகக் கருதி செயல்படக்கூடாது!
4. உடல் அழகைவிட உள்ளத்தின் அழகே உண்மை அழகு!
5. தோல்வியை ஒப்புக் கொள்வது பெருந்தன்மை; எனவே தோல்வியை ஒப்புக்கொள்ள அச்சம் கொள்ளக்கூடாது.
6. தான் செய்த தவறை ஒப்புக் கொள்கிறவனே, நல்லவர்களில் முதலாமவனாக எண்ணப்படுவான்.
7. தீங்கிழைத்தவருக்குத் தீங்கு செய்வதும் பழிக்குப் பழி வாங்குவதும் சரியல்ல!
8. சாவதற்கு ஒருபோதும் அஞ்சக்கூடாது; ஆனால் அநீதிக்கு அஞ்ச வேண்டும்!
9. சூழ்ச்சி செய்வோருக்கும் மனக்
கசப்புடன் பழகுவோருக்குமிடையில் வாழ்வதைக் காட்டிலும் இறப்பதே மேல்!
10. மற்றவர்கள் புகழும் பெருமையும் அடைவதற்குத் துணையாக இருக்க வேண்டுமேயொழிய, தமக்கென்று எவ்விதப் புகழையும் விரும்பக்கூடாது!