காலம் கடத்தாதே!
காலம் கடந்திடக் கூடாது கடமை முடித்திடு கருத்தாக! நாளும் போக்கிடக் கூடாது நன்மைகள் செய்திடு கனிவாக! ஆழம் காணாக் கடலுள்ளே ஆஹா எத்தனை பேரமைதி! ஆலும் வேலும் போலிருந்தால் அடடா அதுதான் பேருறுதி! ஆழக்கடலும்
காலம் கடந்திடக் கூடாது
கடமை முடித்திடு கருத்தாக!
நாளும் போக்கிடக் கூடாது
நன்மைகள் செய்திடு கனிவாக!
ஆழம் காணாக் கடலுள்ளே
ஆஹா எத்தனை பேரமைதி!
ஆலும் வேலும் போலிருந்தால்
அடடா அதுதான் பேருறுதி!
ஆழக்கடலும் ஆலும் வேலுமாய்
அறிவைப் பெருக்கிட வேண்டாமா!
அதனால் வாழ்வில் கரை சேர
ஆவல் கொண்டிட வேண்டாமா?
ஞாலம் மூடிய மடைமைகளை
ஞானத் தினாலே நீக்கிவிடு!
நல்லதைச் செய்திடும் திறத்தாலே
நன்மைகள் பலவே ஆக்கிவிடு!
சீலம் உயர்ந்திடப் பாடுபடு
சீரும் சிறப்பும் நீ அடைவாய்!
காலம் கடந்திடக் கூடாது
கடமை முடித்திடு கருத்தாக!