காந்தியடிகள் படிக்கும் காலத்தில் நடந்த நிகழ்ச்சி இது.
ஒருமுறை காந்தி படிக்கும் வகுப்புக்குக் கல்வி அதிகாரி ஒருவர் வந்தார். அப்போது வகுப்பாசிரியர் மாணவர்களுக்குச் சொல்வதை எழுதுதல் என்னும் "டிக்டேஷன்' கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஆசிரியர் "கெட்டில்' என்ற சொல்லை எழுதச் சொன்னார். காந்தி தவறாக எழுதியிருந்தார். அதைக் கவனித்துவிட்ட ஆசிரியர் அவருக்கு முன்னால் இருந்த மாணவன் சரியாக எழுதியிருந்ததையும் கவனித்தார். அந்த மாணவனைப் பார்த்தக் காப்பியடித்துச் சரியாக எழுதுமாறு ஆசிரியர் காந்தியிடம் சைகை மூலம் தெரிவித்தார்.
ஆனால், காந்த அவ்வாறு செய்யவில்லை! அது தவறான பழக்கம் என்பதால்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.