முகப்பு
சிறுவர்மணி

வசதி!

அறிஞர் அண்ணா முதல்வராகப் பதவியேற்றதும் அவரது வீட்டுக்கு, முதல்வர் என்ற வகையில் பலவிதமான வீட்டு உபயோகப் பொருட்களை அரசு அதிகாரிகள் கொண்டு வந்து வைத்தனர். அப்போது அண்ணாவின் மனைவி, ""மாடியிலும் கொஞ்சம் மே

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

அறிஞர் அண்ணா முதல்வராகப் பதவியேற்றதும் அவரது வீட்டுக்கு, முதல்வர் என்ற வகையில் பலவிதமான வீட்டு உபயோகப் பொருட்களை அரசு அதிகாரிகள் கொண்டு வந்து வைத்தனர்.

அப்போது அண்ணாவின் மனைவி, ""மாடியிலும் கொஞ்சம் மேஜை, நாற்காலிகள் போடச் சொல்லுங்கள்....'' என்று மெதுவாகக் கேட்டார்.

அதற்கு அண்ணா, ""வேண்டாம்... பதவிக்காலம் எப்போது வேண்டுமானாலும் முடியலாம். அப்போது வந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். இந்த அரசுப் பொருட்கள் அனைத்தும் கீழே இருந்தால்தான் அவர்கள் எளிதாக எடுத்துக் கொண்டு போக வசதியாக இருக்கும்...'' என்றார்.

பணிதான் நிரந்தரம் பதவி நிரந்தரமல்ல என்பதை எவ்வளவு எளிதாக விளக்கியிருக்கிறார் அண்ணா!

முழு கட்டுரையைப் படிக்க →