இரவல்!
புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் தன் நண்பர் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். ""என் அறையிலேயே இருந்து படித்துவிட்டுப் போவதாக இருந்தால் உமக்குப் புத்தகத்தைத் தருகிறேன்'' என்றார் அவ
புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் தன் நண்பர் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார்.
""என் அறையிலேயே இருந்து படித்துவிட்டுப் போவதாக இருந்தால் உமக்குப் புத்தகத்தைத் தருகிறேன்'' என்றார் அவர். மார்க் ட்வெயின் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
சில நாட்கள் கழிந்தன... அதே நண்பர் மார்க் ட்வெயினின் வீட்டுக்கு வந்து, ""உங்கள் வீட்டு மண்வெட்டியைச் சற்று இரவல் கொடுங்களேன்...'' என்று கேட்டார்.
உடனே, ""என் தோட்டத்திலேயே கொத்திவிட்டுப் போவதாக இருந்தால் மண்வெட்டியைத் தருகிறேன்'' என்றார் கிண்டலாக மார்க் ட்வெயின்.