பார்வை!
பத்ரிநாதரைத் தரிசிக்கச் சென்ற பக்தர்களில் சூர்தாசரும் ஒருவர். சூர்தாசர் பார்வயைற்றவர்.
பத்ரிநாதரைத் தரிசிக்கச் சென்ற பக்தர்களில் சூர்தாசரும் ஒருவர். சூர்தாசர் பார்வயைற்றவர்.
பக்தர் ஒருவர், ""ஐயா, சூர்தாசரே, தங்களுக்குத்தான் பார்வை இல்லையே, பத்ரிநாதரை எப்படி தரிசனம் செய்வீர்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு சூர்தாசர், ""ஐயா, பார்வையற்ற என்னால் பத்ரிநாதரைப் பார்க்க முடியாதுதான். ஆனால் பத்ரிநாதர் என்னைப் பார்ப்பாரே...? நாம் கடவுளைப் பார்க்கிறோம் என்பதைவிட நம்மைக் கடவுள் பார்க்கிறார் என்ற எண்ணம் உயர்வானதல்லவா?'' என்று திருப்பிக் கேட்டார்.
இந்த பதிலைக் கேட்ட அந்த பக்தர் நெகிழ்ந்து போனார்.