முகப்பு
சிறுவர்மணி

இயற்கை அன்னை

காலையிலே ஒளிப்பிழம்புக்கதிரவனாய் விழிப்பாள்!

சிறுவர்மணி

இயற்கை அன்னை

காலையிலே ஒளிப்பிழம்புக்கதிரவனாய் விழிப்பாள்!

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:50 AM
பகிர்:

 காலையிலே ஒளிப்பிழம்புக்
 கதிரவனாய் விழிப்பாள்!
 கடலலையில் குளித்தெழுந்து
 காரிருளை ஒழிப்பாள்!
 
 சேலையென வயல்வழங்கும்
 செழும்பசுமை உடுப்பாள்!
 செங்கமல முகமலர்ந்து
 சிறுமுறுவல் தொடுப்பாள்!
 
 சோலைவன வசந்தமலர்
 சூடிக்குழல் முடிப்பாள்!
 சுகமளிக்கும் நிழற் குடையைச்
 சுடும்வெயிலில் பிடிப்பாள்!
 
 மாலையிலே மனங்குளிரும்
 மாருதமாய் நடப்பாள்!
 மயங்கும்அந்தி நில விரவாய்
 மாறிநமைக் கடப்பாள்!
 
 ஆலைபெறும் கனிமங்களை
 அருங்கொடையாய் அளிப்பாள்!
 அய்ந்துபூத கணங்களிலும்
 அவளிருந்து களிப்பாள்!
 
 பாலைவன உயிர்களுக்கும்
 பசிக்குணவு படைப்பாள்!
 பாசமுடன் உலகனைத்தும்
 படுக்கமடி கொடுப்பாள்!
 

 

முழு கட்டுரையைப் படிக்க →