சிறுவர்மணி

இந்திய சுதந்திரச் சுடர்கள்!

மகாத்மா காந்தி, அம்பேத்கார்!மனிதருள் மாணிக்கம் நம் நேரு!பகத்சிங், வாஞ்சி, பாரதியார்!பாரதம் காக்க எழுந்தார்கள்!

சுப்ரமணிய பாண்டியன்

மகாத்மா காந்தி, அம்பேத்கார்!

மனிதருள் மாணிக்கம் நம் நேரு!

பகத்சிங், வாஞ்சி, பாரதியார்!

பாரதம் காக்க எழுந்தார்கள்!

கப்பல் ஓட்டினார் வ.உ.சி!

கர்ஜித் தெழுந்தார் கட்டபொம்மன்!

அப்புறப் பட்டார் அன்னியரே!

அரவிந்தர், நேதாஜி முன் நின்றார்!

கோகலே, குமரன், வ.வே.சு!

கும்பெனிப் படைக்கு எதிரானார்!

பூலித் தேவன், மருது வீரர்கள்

பொங்கி எழுந்தார் முதலாக!

செண்பகராமன், சந்திரபோஸ்

தீரர் சத்தியமூர்த்தியவர்!

செம்மல் காம ராஜரெனச்

சுதந்திரச் சுடர்கள் பலருண்டு!

நெஞ்சை விட்டு விலகவில்லை!

நேற்றைய தியாகம் அகலவில்லை!

இந்திய விடுதலை தியாகச்சுடர்கள்

எழுச்சிக் காவியம் அறிவோமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT