பொன்மொழிகள்
உயர்ந்த எண்ணங்கள் உடையோர் ஒரு நாளும் தனித்தவர் ஆகார்.
* உயர்ந்த எண்ணங்கள் உடையோர் ஒரு நாளும் தனித்தவர் ஆகார்.
- சர் பிலிப் சிட்னி
* புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு! இகழ்வது அதைவிடத் தப்பு!
Advertisement
- வால்டேர்.
* துன்பம் வந்துவிடும் என்ற பயம்தான் துன்பத்தைவிட துயரமானது
- மேக்ஸ் நோர்டா
* இறந்து போனவனின் செருப்புக்குக் காத்திருப்பவன் வெறுங்காலுடனே நடக்க வேண்டிவரும்.
- டேனிஷ் பழமொழி
* உண்மையுள்ளவனுக்கு கவலை இல்லை! அறிவுள்ளவனுக்குக் கலக்கமில்லை! தைரியமுள்ளவனுக்கு பயமில்லை!
- சீனப்பழமொழி
* நாம் முன்னேற நட்பு ஒரு படிக்கட்டாக அமையட்டும்! - ஆப்பிரிக்கப் பழமொழி.
* பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது! பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது!
- ஸ்பெயின் பழமொழி
* சாத்தான் நேரில் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் மதுவை அனுப்பி வைக்கிறான்.
- யூதப்பழமொழி.