முகப்பு
சிறுவர்மணி

கதைப் பாடல்: ஜோதிடர்!

நாட்சிறப்பு நூலிலும்நாட்கிழிக்கும் தாளிலும் -இந்த

Updated On : 27 ஜனவரி, 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:34 PM

நாட்சிறப்பு நூலிலும்
நாட்கிழிக்கும் தாளிலும் -இந்த
ஆளைப் பற்றி பெருமையாய் 
அச்சடித்து உள்ளனர்!

பிறந்த தேதி ஜாதகம் 
எதுவும் தேவை இல்லையே!
விந்தை என்ற போதிலும் 
விஷயம் பரம ரகசியம்!

காத்துக் கிடக்க வேண்டுமே 
காண விரும்பும் யாவரும்!
பேச்சை வைத்து நம்பலன்
புட்டு புட்டு வைக்கிறார்!

Advertisement

சாமி வந்தும் ஆடுவார்!
சறுக்கி நம்மேல் சாடுவார்!
நம்புவோர்கள் பலனையே
வந்து தெரிந்து கொள்ளலாம்!

உயரமான இடத்திலே 
உட்காந்திருப்பார் அமைதியாய்!
வயிறு சிறுத்த போதிலும் 
வாலு கொஞ்சம் நீளமே!

சொல்லும் வண்ணம் நடப்பதாய்
சொல்கிறார்கள் யாவரும்!
"பல்லி' அந்த ஜோதிடர்!
பலனைச் சொல்லும் சாதகர்!

ஆத்திரத்தில் துள்ளியே
சோத்துக்குள்ளே பாயுமுன் 
பாத்திரங்கள் யாவையும் 
பத்திரமாய் மூடுங்கள்!

பலனைச் சொல்லும் பல்லியார்
பாவம் மிகவும் ஒல்லியாம்!
தவணை முறையில் தகவலைத் 
தந்த போதும் "கில்லி' யாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.