(பொருட்பால் - அதிகாரம் 88 - பாடல் 5 )
தன்துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
இன்துணையாக கொள்கவற்றின் ஒன்று.
-திருக்குறள்
எந்தத் துணையும் இல்லாதவன்
இரண்டு பகைவர்க்கு இடையிலே
மாட்டிக் கொண்டால் துன்பமே
மதியால் வெல்ல வேண்டுமே
பகைவர் இருவரில் ஒருவரை
இனிய துணையாய்ப் பெற்றிட
ஏற்ற வழியைக் கண்டறிந்து
இசைந்து பழக வேண்டுமே.