""எந்தப் பூச்சிக்குக் குளிரவே குளிராது?''
""நீயே சொல்லு''
""கம்பளிப் பூச்சிக்கு!''
எஸ்.சிதம்பரம், காரைக்குடி.
""எங்கப்பா படிக்கிறதுக்கு ரொம்ப உற்சாகப்படுத்தறார்.... ஊக்கப்படுத்துவார்!...''
""ரொம்பப் படுத்தறார்னு சொல்லு!...''
என்.கே.மூர்த்தி, சாலிகிராமம், சென்னை - 600093.
""எங்கப்பா வியாபாரம் சக்கை போடு போடுது!...''
""உங்கப்பா என்ன வியாபாரம் பண்றார்?''
""கரும்பு ஜூஸ் வியாபாரம்! ''
பானுமதி, 95, தணிகாசலம் நகர், சென்னை - 600110.
""பால் நெய், முந்திரிப்பருப்பெல்லாம் போட்டு பொங்கல் பண்ணியிருக்கேன்
சாப்பிட வா!''
""இன்னிக்கு ஸ்கூல் லீவாம்மா?...''
""அதெல்லாம் ஒண்ணுமில்லே....
ஏன் கேக்கறே?''
""நீங்கதானே பொங்கலுக்கு ஸ்கூல் லீவுன்னு சொன்னீங்க!''
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
""எங்க அப்பாவோட வண்டியிலே மட்டும் யாரும் லிஃப்ட் கேக்க மாட்டாங்க!....''
""ஏன்?''
""ஏன்னா அவர் ஓட்டுறது ரோடு இஞ்ஜின் ஆச்சே!....''
பானுமதி, சென்னை.
"" மொட்டை எங்க அடிச்சீங்க? ''
""இதென்ன கேள்வி?....தலையிலேதான்! ''
க.நாகமுத்து, திண்டுக்கல் -624005