சிறுவர்மணி

இனிய சொல்லால் வாழ்க!

ஒரு செடியில் முள்ளும் மலரும்;முள்ளை எவரே விரும்புவர்?அருமை மணமும் அழகும் நிறைந்த 

அழகு இராமானுஜன்

ஒரு செடியில் முள்ளும் மலரும்;
முள்ளை எவரே விரும்புவர்?
அருமை மணமும் அழகும் நிறைந்த 
மலரைத் தானே விரும்புவர்!

ஒரு முகிலில் இடியும் மழையும்;
இடியை எவரே விரும்புவர்?
பெருமைக் குரிய மழையைத் தானே 
உயிராய் மதித்து விரும்புவர்!

ஒரு மொழியில் ஏச்சும் பேச்சும்;
ஏச்சை எவரே விரும்புவர்?
கரும்பின் சாறாய் சுவைக்கும் இனிய
பேச்சைத் தானே விரும்புவர்!

ஒன்று சொல்வேன் நன்று கேள் - நீ 
உலகோர் விரும்பும் ஒருவனாய்
என்றும் மலர்போல், மழைபோல் சான்றோர்
இனிய சொல் போல் வாழ்க நீ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT