கடல்!
வா வா தம்பி கடலருகேவரவேற்கிறது அலைக்கரங்கள்!பூவாய்ச் சிதறும நுரையழகு
வா வா தம்பி கடலருகே
வரவேற்கிறது அலைக்கரங்கள்!
பூவாய்ச் சிதறும நுரையழகு
பொலியும் நுரையால் கரையழகு!
கடலும் வானும் நெருங்கியதால்
உடலில் நீலம் பூசியதோ?
சுடரும் நிலவும் சூரியனும்
கடலில் எழுதல் போல் தெரியும்!
முத்தை எடுக்க வருகவென
முரசம் முழக்கி அழைக்கிறதோ?
நித்தம் மீன்கள் பிடிப்பதற்கு
கத்தும் குரலால் அழைக்கிறதோ?
Advertisement
Advertisement
மழலைச் சிறுவர் வீடுகட்ட
மணலும் பரந்தே கிடக்குது பார்!
அழகாய் அலையின் ஊஞ்சலிலே
ஆடும் ஓடம் ஓடுது பார்!
உண்ணும் உணவில் சுவையளிக்கும்
உப்பை எடுப்பார் பாத்தி கட்டி!
இன்னும் இன்னும் கடல் வளத்தை
ஏட்டுப் படிப்பில் தெரிந்திடுக!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.