சிறுவர்மணி

தோகை மயில்!

அழகு மயிலின் ஓசை தன்னை அகவல் என்று கூறுவர்!

DIN


அழகு மயிலின் ஓசை தன்னை 
அகவல் என்று கூறுவர்!
பழகு தமிழில் புலவர்களின் 
பாடல் ஒன்று அகவல்தான்
குளிரும் காற்று வீசும் போது 
தோகை விரிக்கும் மாமயில்!
ஒளிருகின்ற புள்ளிக் கோலம் 
உடலில் உண்டு இயற்கையாய்!
ஆடுகின்ற வண்ணத் தோகை 
ஆண் மயில்தான் பெற்றது
காடு போன்ற சோலைகளில் 
காணலாமே மயில்களை!
வாடைக் காற்றில் ஆடும் மயிலை
வருந்துவதாய் எண்ணியே 
ஆடை ஒன்று போர்த்தியுள்ளான் 
அன்று வள்ளல் பேகனும்!
ஆறு படையில் வீடு கொண்ட 
ஆறுமுக வேலவன் 
ஏறுகின்ற ஊர்தி என்று 
எழுதி வைத்தார் ஏட்டிலே!
பட்டுத் தோகைச் சிறகில் ஒன்றைப் 
புத்தகத்தில் வைப்பதால் 
குட்டி போடும் என்று நம்பும் 
குழந்தை மனம் வேடிக்கை!

- சி.விநாயகமூர்த்தி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் நிறுத்தம்: மாம்பாக்கம்

விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!

மூன்று நாள் விடுமுறை முடிந்து சொந்த ஊா்களுக்கு செல்வோரால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் கூட்டம்

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்: இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகா் கருத்து

SCROLL FOR NEXT