சிறுவர்மணி

வீச வேண்டும் காற்று!

சி.விநாயகமூர்த்தி


வந்து வந்து வீசவேண்டும் 
வாசம் உள்ள தென்றலே!
சிந்து சிந்தும் குயிலின் பாட்டைத் 
தந்து செவியில் ஊட்டுக!

சாமரம் நீ வீச வேண்டும் 
பூமரங்கள் மூலமாய்!
மா மரங்கள் கனியும் இள
வேனில் தந்த தென்றலே!

குட்டித் தம்பி விட்ட பட்டம் 
எட்டி எட்டிப் பறக்கவே
தொட்டு நீயும் உயரே ஏற்ற 
தோழன் போல உதவு நீ!

இலைகள் யாவும் குலுங்க வைத்து 
இசையை வழங்கு தென்றலே!
அலைகள் யாவும் ஊஞ்சலாக்கி 
ஓடம் ஆட வருக நீ!

வளைவில் லாத காட்டு மூங்கில் 
துளையில் நுழையும் பொழுதிலே 
விளையும் நாதம் கேட்பதற்கு 
வீச வேண்டும் தென்றலே!

அங்கும் இங்கும் எங்கும் தங்கி 
ஆண்டவன் போல் வாழ்கின்றாய்!
எங்கள் மூச்சில் கலந்ததாலே
இயக்கும் மகா சக்தி நீ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT