""என்னுடைய பையன் ராமுவுக்கு ஜுரம்!.... அதனாலே இன்று பள்ளிக்கு ஒரு நாள் லீவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்....''
""அப்படியா,.... சரிங்க..... ஃபோன்லே பேசறது யாருங்க?...''
""என்னுடைய அப்பாதான் சார் பேசறேன்!''
உ.அப்துல் ஹாதி, கடையநல்லூர்.
""குலுங்கி, குலுங்கி சிரிக்கிறா மாதிரி ஒரு ஜோக் சொல்லு!''
""ஏன்,.... எதுக்கு?''
""மருந்து பாட்டிலைக் குலுக்கிட்டுக்
குடிக்கணும்னு போட்டிருக்கு!.... நான் மறந்துபோய் குலுக்காம குடிச்சுட்டேன்!''
உ.அப்துல் ஹாதி, கடையநல்லூர்.
""உன் பேர் என்ன?''
""முதலாம் பாபு!''
""உன் தம்பி பேரு?''
""இரண்டாம் பாபு!''
""ஏண்டா இப்படி பேர் வெச்சிருக்காங்க.... வித்தியாசமா இருக்கே!''
""எங்கப்பா சரித்திர ஆசிரியர்டா!''
ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம்,
திருநெல்வேலி டவுன்- 627006.
""எதுக்கு அந்த பாம்பு சாமியார் முன்னாடி படமெடுத்து ஆடுது?''
""அதுவா?.... சாமியார் முகத்திலே தவக்களை தெரியுதில்லே!.... அதான்!''
உ.அலிமா பீவி, கடையநல்லூர்.
""புல்லாங்குழல் வாங்கப் போனியே,.... ஏன் வெறுங்கையோட திரும்பி
வந்துட்டே?''
""எல்லாத்திலேயும் ஓட்டையா இருந்திச்சிடா!''
ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல் - 626130.
""கொடியிலே காயுற எங்கம்மா புடவைகள்ளே எல்லாம் ஒரே எறும்பா இருக்குடா!''
""கரெக்டுதானே!.... எறும்புகள் சாரி, சாரியாத்தானே போகும்!''
பாளைபசும்பொன், 9/20, கிரம்மர்புரம்,
மதுரை - 625076.