கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் புரட்சிகரமான கவிஞர் ஒருவரின் பெயர் கிடைக்கும்.
எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. மூவேந்தர்களில் ஒருவர்...
2. வண்டி உருண்டோட இது அவசியம் தேவை...
3. கைப்பழக்கம் இருந்தால் இது கைகூடும்...
4. இடுகாட்டில்தான் இவருக்கு வேலை...
5. இது உங்களுக்கும் பிடிக்கும், எறும்புக்கும் பிடிக்கும்...
விடை:
கட்டங்களில் வரும்
சொற்கள்
1. பாண்டியர்,
2. சக்கரம்,
3. சித்திரம்,
4. வெட்டியான்,
5. சர்க்கரை.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : பாரதியார்