ஊழ்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
அறத்துப்பால் - அதிகாரம் 38 - பாடல் 7
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
- திருக்குறள்
கோடி கோடியாய்ச் சேர்த்தாலும்
அனுபவிக்கும் பலனுடன்
விதியிருந்தால் நுகரலாம்
இல்லையென்றால் வீணாகும்
வகுத்தவனின் வழியில்தான்
வாழ்வமையும் எல்லார்க்கும்
முயன்று சேர்த்த பொருளையும்
அனுபவித்து வாழ்தல் அரிதே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்