புல்லறிவாண்மை
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
- திருக்குறள்
அரிய நல்ல அறங்களைக்
கடைப்பிடிக்கக் கருதாமல்
கை நழுவ விடுவோர்கள்
தனக்குத்தானே துன்பம் செய்வர்
Advertisement
தனக்குத் துன்பம் செய்வதை
நன்மையாகக் கருதியே
நாளை வீண் செய்வார்கள்
நல்ல வாழ்வை இழப்பார்கள்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்