முகப்பு
சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

விலங்குகள் மற்றும் பறவைகளின் பொழுதுபோக்கு என்னவாக இருக்கும்?

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

கேள்வி: விலங்குகள் மற்றும் பறவைகளின் பொழுதுபோக்கு என்னவாக இருக்கும்?

பதில்: களைப்பில் இருந்து நீங்க ஓய்வு. ஓய்வை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது பொழுதுபோக்கு. காகத்தின் பொழுதுபோக்கு என்ன?மத்தியான நேரத்துல காகம் என்ன பண்ணும்? அங்கதான் அதோட பொழுதுபோக்கு இருக்கு.

குளம் குட்டை போன்றவற்றின் ஓரத்தில் அமர்ந்துகொண்டு அங்கிருக்கும் சரளைக் கற்களில் தனது அலகைத் தேய்த்து பாலிஷ் செய்து கொண்டிருக்கும். நீரில் குளிக்கும். இதுதான் அதன் பொழுதுபோக்கு. பெரும்பாலான பறவைகளுக்கு இதுதான் பொழுதுபோக்கு. அடுத்து, பூனை. பூனையின் பொழுதுபோக்கே தூங்குவதுதான். விளையாடுவதும் பூனைக்குப் பிடிக்கும்.

Advertisement

நாய்களின் பொழுதுபோக்கு அவற்றின் உடலிலில் உள்ள உண்ணிகளை அகற்றுவது. சரி, நாய்க்கு உண்ணியே இல்லையென்றால் என்ன செய்யும்? ஏதாவது ஒரு இடத்தில் படுத்துக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்கும்.

ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றின் பொழுதுபோக்கு அசைபோடுவது ஆகும்.
மீன்களுக்கு பொழுதுபோக்கு சாப்பிடுவதும், நீந்துவதும்தான்.
ஓய்வை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற சிந்தனை விலங்குகளுக்குக் கிடையாது. ஆகவே, அவை உண்ணும், உறங்கும் நேரம் தவிர செய்பவை அனைத்தும் பொழுதுபோக்குதான்.

நமக்கு சிந்திக்கும் திறன் இருப்பதால் நாம் திட்டம் போட்டுப் பொழுது போக்குகிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments